
என் அலுவலக நண்பர் அவர் கவிஞரும் கூட ...
அவர் எழுதிய ஒரு கவிதை இதோ
இன்னும் ஓர் இரவு...
சலனமற்று துவங்குகிறது மற்றுமொரு காலை...
யாருமற்ற மேசையில் தனியே உணவருந்த வேண்டும் என்கிற நினைவே...
காலை உணவை மறுக்க செய்கிறது...
நினைவில் வர மறுக்கும் நேற்றைய கனவுகளை தேடி தேடியே தொலைந்து போகிறது எனது பகலும் சில நினைவுகளும்...
யாருமற்று கழியும் மாலை பொழுதுகள்...
இரவு நேர மயானமாய் இரைச்சல் நிறைந்த மனதின் தனிமையை போக்க முயல்கிறேன்...
சில நேரம் வண்ணங்கள் கொண்டும்...
வண்ணங்கள் வாய்க்காத தருணங்களில் உதிரம் கொண்டும்....
போனதாய் நினைக்கும் வேளையில்.....
மூடிய இமைகளின் வழியே வெளியேறும்....
சிறு கண்ணீரும் சில கனவுகளும்....
எஞ்சிய எனது கருப்பு வெள்ளை கனவுகளும் குருதி பாய்ந்து வண்ணமாகிறது...
திடுக்கிட்டு எழுகையில் கடந்து போகிறது....
உறக்கம் தொலைத்த இன்னும் ஓர் இரவு....
- சசிதரன்
2 கருத்துகள்:
Its good...!
அன்பின் செந்தில்
கவிதை அருமை - பகிர்வினிற்கு நன்றி செந்தில்
ந்ல்வாழ்த்துகள் செந்தில்
நட்புடன் சீனா
கருத்துரையிடுக